tamilnadu

img

கல்வியை காவிமயமாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை

சென்னை,ஜூலை 26- தமிழ்நாடு உயர் நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழ கத்தின் சார்பில் “தேசிய கல்விக் கொள்கை வரைவு’’  குறித்த மாநில கருத்தரங்கம்  சென்னையில் ஞாயிறன்று  (ஜூலை 28) நடைபெற வுள்ளது. சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில்நிலையம் எதி ரில் உள்ள தேவநேயப்பா வாணர் அரங்கில் (எல்எல்ஏ கட்டிடம்) காலை 10 மணிக்கு  தொடங்கும் இந்த கருத்த ரங்கிற்கு ஜாக்டோ ஜியோ  மாநில ஒருங்கிணைப்பாள ரும் பட்டதாரி ஆசிரியர் கழக  நிறுவனத் தலைவருமான அ. மாயவன், மாநிலத்தலைவர் எஸ்.பக்தவச்சலம், மாநில மகளிர் அணிச் செயலாளர் ஆர்.வி.லதா ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள். பொதுச்செயலாளர் சேது  செல்வம் வரவேற்றுப்பேசு கிறார். கருத்தரங்கை துவக்கி வைத்து  திமுக மாநிலங்க ளவை உறுப்பினர் திருச்சி  சிவா, மக்களவை உறுப்பி னர்கள் தொல் திருமாவள வன், கே.சுப்புராயன், செ. ஜோதிமணி, அதிமுக மாநி லங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், பேரா சிரியர் அருணன், கல்வியா ளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றுகின்றனர். மாநிலப்பொருளாளர் கே.ஜி.பாஸ்கரன் நன்றி கூறு கிறார்.இந்த கருத்தரங்கில் ஆசிரியர்களும் மாண வர்களும் பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொள்ளவேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.